அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தொடர் உள்ளிருப்பு போராட்டம் மீண்டும் தொடரும் என நேற்று மாலை பல்கலைக்கழக வளாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் ரவி கபில்தேவ் துணை ஒருங்கிணைப்பாளர் மனோகர் முத்து வேலாயுதம் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வு பணப் பயன்கள் வழங்கிட உள்ளிட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து உள் இருப்பு போராட்டங்கள் நடைபெற்றது இதன் விளைவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு கூட்டமைப்பின் பொறுப்பாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் என அனைவரும் நேற்று பொதுக் குழுவில் முடிவு எடுத்து மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி