Read Time:1 Minute, 1 Second
பரங்கிப்பேட்டை, அக்.24-பரங்கிப்பேட்டை பேரூராட்சி 1 – வது வார்டு இப்ராஹிம் நகரில் 15-வது மானிய நிதிக்குழு மூலம் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இந்த பணியை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொ ழிசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்கும்படி அங்கிருந்த அதிகா ரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் வீரஆனந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி