Read Time:1 Minute, 20 Second
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் மாபெரும் கோலம் போட்டி ஆறுமுக நாவலர் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சிதம்பரம் தலைவர் கோமதி கோவிந்தராஜன் செயலாளர் செல்வி முத்துக்குமரன் பொருளாளர் வேதா சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் 45 பெண்கள் கலந்து கொண்டனர் போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற அவருக்கு பரிசு மற்றும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவி மருத்துவர் பத்மினி கபாலி மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கினார் நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் முத்து நாச்சியம்மை மற்றும் மூத்த நிர்வாகி சோபியா ரவிச்சந்திரன் வரலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி