0 0
Read Time:2 Minute, 6 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மண்ணமந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று வருகிறது. இதற்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், மீடியா கண்ட்ரோல் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட உணவில், வடையின் உள்ளே வண்டு இருந்துள்ளது. இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேட்ட போது, வண்டினை எடுத்து போட்டு விட்டு சாப்பிடவும் என அதிரடியாக பதில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், பல செய்தியாளர்களுக்கு உணவும் வழங்காமலும், வெறும் இட்லி மட்டும் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தால் செய்தியாளர்கள் யாரும் உணவு எடுத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சென்றுவர அனுமதி இல்லை என்பதால் செய்தியாளர்கள் உணவு இன்றி தவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %