Read Time:1 Minute, 9 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் புது குப்பம் கிராமத்தில் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக அமைய உள்ள வலை பின்னும் கூடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா,இ.ஆ.ப,, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.
நிகழ்ச்சியில் மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் ராஜேஷ்குமார், மீன்வளத்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் மதுமிதா ரவி காவேரி பூம்பட்டின ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி:ஜமால்