Read Time:1 Minute, 12 Second
கடலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடலூர் மாநகராட்சி பொது கழிவறையில் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபடுகின்றார்கள் இலவசம் தானே ஏன் பணம் என்று கேட்டால் நாங்கள் சுத்தம் செய்கிறோமே அதற்காக தான் என்கிறார்கலாம். தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடமாக பேருந்து நிலையம் இருக்கின்றது.
எத்தனையோ ஏழை எளிய மக்கள் பயன்படுத்த தான் இந்த இலவச கட்டணமில்லா கழிப்பிடம் அதிலும் பணம் வசூல் செய்தால் பொதுமக்களின் நிலைமை என்ன ஆகும் மாவட்ட நிர்வாகம்,நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: முரளிதரன்