தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் பண்டிகேட் சிவம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பா அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இதில் மாறுதல் துணை தலைவர் ஜி ஜான் பாஸ்கர் மற்றும் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரவி இவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
“தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைகள் கேட்டறிந்து உடன் நடவடிக்கை எடுக்க மாதம் ஒருமுறை கோட்டாட்சியிடம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரும் குறை தீர்வு கூட்டம் நடத்த கோரி வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையிட்டும் இரண்டு ஆண்டு காலமாக எந்த குறை தீர்வு கூட்டமும் நடத்த மாவட்ட கோட்ட நிர்வாகத்தை விரைந்து நடத்திட மாவட்ட சங்கம் கேட்டு க்கொள்கிறது
கடலூர் மாவட்டத்தில் தகுதிகளின் பருவம் முடிப்பதை கிராம நிர்வாக அலுவலர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் பெற்று உடனே ஆக தகுதிகளை பருவம் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
மாவட்டத்தில் நிர்வாக பயிற்சி நில அளவை பயிற்சி முடிக்காத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
கடலூர் மாவட்டத்தில் கோட்டை மாறுதல் கேட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக கோட்டை மாநில வழங்க கேட்டுக் கொள்ளப்படுகின்றது
தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் தனது சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்தில் பணிபுரிய வர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி மாறுதல் செல்ல வருவாய் நிர்வாக ஆணையர் இணையதளம் மூலம் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது ஆனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட மாறுதல் மனு அளித்த அனைத்து இணையதள மனுக்களையும் தள்ளுபடி செய்ததை மாவட்ட சங்கம் வருத்தத்தை தெரிவித்து உடனடியாக இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறோம்
நமது சங்கத்தின் இறந்து போன நாலு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிதி அளித்து உதவிய அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து இனிவரும் காலங்களில் இது போன்ற நமது உறவுகளை ஏற்க நெறித்தால் குறைந்தது ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என்று இவர்களுக்கு காலங்களில் நிதியை பெறுவதற்கு மாவட்ட பொருளாளர் துரைராஜ் நிதிக்கு தலைவராக இருந்து வட்டம் வாரியாக நிதுக்குழு உறுப்பினரை நியமித்து செயல்பட மாவட்ட சங்கம் உரிய அங்கீகாரம் வழங்குகிறது
மேற்கண்ட கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் நமது சங்க பொறுப்பாளர்களை அழைத்து ஏழாம் தேதிக்குள் பேசவில்லை என்றால் வரும் 8 8 25 அன்று நமது கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளம் என மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து கொள்கிறோம்.”.
இவ்வாறு தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி