Read Time:1 Minute, 18 Second
மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 120 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப. , தலைமை வகிக்க, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் என்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.