0 0
Read Time:1 Minute, 33 Second

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்காக தீவிரமாக தயாராக வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடம் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதாவது காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என 3 பருவங்களாக பள்ளிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி 12ம் வகுப்புகளுக்கு டிச.9 ஆம் தேதி முதல் டிச. 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %