0 0
Read Time:1 Minute, 32 Second

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த சூழலில், பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %