Read Time:1 Minute, 12 Second
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும், தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதேபோல, தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.