0 0
Read Time:1 Minute, 31 Second

பொறையாா் அரசு மருத்துவமனையில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து, மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களை சந்தித்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, செம்பனாா் கோவில் வட்டாரத்தில் 2 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் கூடுதல் மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டாா். வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், மாவட்ட பொருளாளா் ரவி, ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், நகரச் செயலாளா் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ சித்திக், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %