Read Time:1 Minute, 10 Second
தரம் இல்லாத சாலையை அமைத்த புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காந்தி நகர் கிளை சார்பில் கண்டனம்:

புதுக்கோட்டை நகராட்சி 32 -வது வார்டு தமிழ் நகர் பகுதியில் கடந்த மாதம் புதியதாக போடப்பட்ட தார்ச்சாலை தரம் இல்லாத காரணத்தால் தற்போது சாலையின் நடுவில் விரிசல், குண்டும் குழியுமாக சாலை பழுதடைந்துள்ளது, இந்த தார்ச்சாலையை பொதுமக்கள் பயண்படுத்த அச்சமாகவும், கனரக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், பழுதடைந்த புதிய தார்ச்சாலையை தரமான முறையில் அமைத்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காந்தி நகர் கிளை சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.