0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு காரின் டயர் திடீரென்று வெடித்தது.

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தூக்கி வீசப்பட்ட கார், எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் சடலங்களை புவனகிரி போலீசார் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சொகுசு காரில் பயணித்த மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். உயிரிழந்த தம்பதி யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %