Read Time:1 Minute, 8 Second
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
சென்னை: இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,110கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து 5-வது நாளாக 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. தியாகராயநகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.