Read Time:1 Minute, 9 Second
டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதியை நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!.
மேட்டூர் அணை திறக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, டெல்டா விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், குறுவை சாகுபடி வெற்றிகரமாக நடைபெற, தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பலரும் யோசனைகளையும் முன் வைக்கிறார்கள்.
“காவிரி மற்றும் கல்லணைக் கால்வாயில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ஆறுகளின் கரைகள் பலவீனமாக உள்ளன. கரைகளை பலப்படுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை” எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தும் வருகின்றனர்.