0 0
Read Time:2 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

தையல்நாயகி அம்மன் உடயாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு அங்காரன், செல்வ முத்துக்குமாரசுவாமி தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் பாதயாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்
அதன்படி நகரத்தார் வழிபாடு திருவிழா நடைபெறுகிறது இதில் காரைக்குடி சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் ஒரத்தநாடு கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழ சீவல்பட்டி, பரமக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் குலதெய்வ வழிபாட்டை நிவர்த்தி செய்ய திங்கள்கிழமை மாலை வைத்தீஸ்வரன் கோவில் வந்தடைந்தனர்.
வருடம் தோறும் வருகின்ற பக்தர்களுக்கு ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக உணவு வழங்குவது வழக்கம் இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு அன்னதானம் ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக நகரத்தார் பக்தர்களுக்கு சுமார் 10000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது
இதில் வைத்தீஸ்வரா அறக்கட்டளையை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “மயிலாடுதுறை: ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

Comments are closed.